பெருங்குடி ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் ஊராட்சி தலைவர் தகவல்

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
பெருங்குடி ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் ஊராட்சி தலைவர் தகவல்
Published on

விளமல்,

திருவாரூர் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சி சார்பில் பெருங்குடி வடக்குத்தெரு, கீழ படுகை, மில் தெரு, அனக்குடி சுடுகாடு ஆகிய பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பழுது நீக்கம், விரிவாக்கம் ஆகியவை நடைபெற்றுள்ளது. பெருங்குடி ஊராட்சியில் 80 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் இலவசமாக ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. 35 பயனாளிகளுக்கும் இலவசமாக கோழி வழங்கப்பட்டுள்ளது. 7 பயனாளிகளுக்கு ஆடு, மாடு பாதுகாப்பு கொட்டகை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பெருங்குடி கிராமத்தில் 3 இடத்தில் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மேரி சுகுணாவதி பிரபு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com