ராசிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

ராசிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராசிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

ராசிபுரம்,

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி, கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் என பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராசிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் வாக்காளர் உறுதி மொழியை வாசித்தார். மற்றவர்கள் அதை திரும்ப சொல்லி உறுதி மொழியை ஏற்றனர். பிறகு அங்கிருந்து மேளதாளத்துடன் புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com