

கச்சிராயப்பாளையம்
வடக்கனந்தல் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கல்வராயன்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா, மண்டல தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையில் 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கச்சிராயப்பாளையம்- கள்ளக்குறிச்சி சாலை, சின்னசேலம் சாலை, கல்வராயன்மலை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், பரிசுபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதேபோல் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ஏழுமலை, மியாட் மனோ மற்றும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.