மண்டியா அருகே சம்பவம் கழுத்தை நெரித்து பெண் கொலை

மண்டியா அருகே கழுத்தை நெரித்து பெண்ணை கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மண்டியா அருகே சம்பவம் கழுத்தை நெரித்து பெண் கொலை
Published on

மண்டியா:

பெண் கொலை

மண்டியா தாலுகா கிக்கேரி அருகே மைசூரு-சென்னராயப்பட்டணா சாலை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவர், சொந்தமாக மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (வயது 45). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஸ்ரீகாந்த் கடைக்கு வியாபாரத்திற்கு சென்றுள்ளார்.

மேலும் 2 பிள்ளைகளும் வெளியே சென்றுள்ளனர். இதனால் வீட்டில் புஷ்பலதா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள், புஷ்பலதாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பியோடி உள்ளனர்.

வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த கிக்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கொலையான புஷ்பலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் புஷ்பலதாவை, மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

ஆனால் அவரை கொன்ற மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. முன்விரோதத்தில் அல்லது வீடு புகுந்து திருடும்போது மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து கிக்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com