கற்பக விநாயகர், கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

காரைக்காலை அடுத்துள்ள வரிச்சிக்குடி கற்பக விநாயகர், கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
கற்பக விநாயகர், கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்
Published on

காரைக்கால்

காரைக்காலை அடுத்துள்ள வரிச்சிக்குடி பெருமாள் கோவில் தெருவில், கற்பக விநாயகர் மற்றும் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. திருப்பூர் திருநாவுகரசு நந்தவன திருமடம் தென்சேரிமலை மடாதிபதி முத்து சிவராமசாமி அடிகளார் தலைமையில் தமிழ் வேதங்கள் முழங்க கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சந்திர பிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ. ஓமலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com