சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
சாராயம் காய்ச்சியவர் கைது
Published on

வேப்பந்தட்டை:

போலீசார் சோதனை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர் குடிகாடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் அனுக்கூர் குடிகாடு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே ஊரை சேர்ந்த அழகிரிசாமி (வயது 45) என்பவர் தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

7 லிட்டர் சாராயம்...

இதையடுத்து தோட்டத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த 7 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 30 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அழகிரிசாமியை கைது செய்த போலீசார், அவரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com