மது விற்றவர் கைது

ஆரணி அருகே மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது
Published on

ஆரணி

ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சிறுமூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேவன் (வயது 37) என்பவர் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com