அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் செல்வா(வயது 55) என்பவர் ஊரடங்கு காலத்தில் மதுபாட்டில்கள் வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்ற போது மது பாட்டில் விற்ற செல்வாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 42 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.