புனேயில் நடந்த கணவன்-மனைவி கொலை வழக்கில் தொடர்புடையவர் மும்பையில் கைது - 30 ஆண்டுக்கு பின் சிக்கினார்.

புனே மாவட்டம் லோனாவாலா பகுதியை சேர்ந்த தன்ராஜ் மற்றும் மனைவி தனலெட்சுமி. கடந்த 1993-ம் ஆண்டு நடந்த இவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய நபரை மும்பையில் கைது செய்தனர்.
புனேயில் நடந்த கணவன்-மனைவி கொலை வழக்கில் தொடர்புடையவர் மும்பையில் கைது - 30 ஆண்டுக்கு பின் சிக்கினார்.
Published on

மும்பை, 

புனே மாவட்டம் லோனாவாலா பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது55). இவரது மனைவி தனலெட்சுமி (50). கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடிக்கும் நோக்கில் அவரது வீட்டிற்குள் புகுந்தனர். இதனை கவனித்த தம்பதி அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அக்கும்பல் தம்பதியை கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வந்தனர். அவர் தனது அடையாளத்தை மறைத்து இருப்பிடத்தை மாற்றி வந்ததால் போலீசாருக்கு அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மும்பை விக்ரோலி கிழக்கு தாகூர்நகர் பகுதிக்கு வந்த கொலையாளியான 49 வயது நபரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இரட்டை கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com