

விருதுநகர்,
விருதுநகர் சுற்று வட்டாரப்பகுதிகளில் இரவு 9.01 மணி அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 3 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2 முறை அடுத்துதடுத்து நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில நொடிகள் நீடித்த நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.