விருதுநகரில் லேசான நில அதிர்வு

நில அதிர்வு காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் வீதிகளில் திரண்டனர்.
விருதுநகரில் லேசான நில அதிர்வு
Published on

விருதுநகர்,

விருதுநகர் சுற்று வட்டாரப்பகுதிகளில் இரவு 9.01 மணி அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 3 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2 முறை அடுத்துதடுத்து நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில நொடிகள் நீடித்த நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com