பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

பாகூரில் மகளின் திருமணத்தை மறைத்ததால் வேதனை அடைந்த பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பாகூர்

மகளின் திருமணத்தை மறைத்ததால் வேதனை அடைந்த பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பால் வியாபாரி

விழுப்புரம் அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த சுள்ளியாங்குப்பம் குறிஞ்சி நகரில் வசித்து வந்தார். இவருக்கு மங்கையர்கரசி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

வெங்கடேசன் வீட்டிலேயே மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் மங்கையர்கரசி, கணவரை பிரிந்து மகள்கள் மற்றும் மகனுடன் கடலூர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

தற்கொலை

மனைவி, பிள்ளைகள் பிரிந்து சென்ற நிலையில், வெங்கடேசன் கடந்த சில மாதங்களாக வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மூத்த மகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் வெங்கடேசனிடம் தெரிவிக்காமல் திருமணம் நடந்துள்ளது. இதை அறிந்த அவர் மனவேதனையில் இருந்து வந்தார்.

இதற்கிடையில் 2-வதாக குடும்ப நடத்தி வந்த பெண்ணும் பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன் இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com