நவம்பர் மாதம் ஷீரடியில் தேசியவாத காங்கிரஸ் கூட்டம்

மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினா.
நவம்பர் மாதம் ஷீரடியில் தேசியவாத காங்கிரஸ் கூட்டம்
Published on

மும்பை,

மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினா. இந்த சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை நவம்பர் 4, 5-ந் தேதி ஷீரடியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், "நவம்பர் மாதம் நடைபெற உள்ள 2 நாள் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இன்று நடந்த கூட்டத்தின் போது, தேசிய விவகாரங்கள், வர இருக்கும் மாநகராட்சி தேர்தலுக்கு தயார் ஆவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல கட்சியின் உள்விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தினோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com