மேல்மலையனூர் அருகே, மின்னல் தாக்கி பிளஸ்-2 மாணவன் சாவு

மேல்மலையனூர் அருகே மின்னல் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுபற்றிய விவரம் வருமாறு:-
மேல்மலையனூர் அருகே, மின்னல் தாக்கி பிளஸ்-2 மாணவன் சாவு
Published on

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள பருதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால், விவசாயி. இவருடைய மகன் அஜித் என்கிற மணி (வயது 17). இவன் சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து விட்டு, தற்போது நடந்து முடிந்த பொதுத்தேர்வை எழுதி இருந் தான். நேற்று காலை அஜித், தங்களுக்கு சொந்தமான மாடுகளை வீட்டின் அருகே உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தான்.

இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, தூறல் விழ தொடங்கியது. இதனால் மாடுகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக, அவைகளை ஓட்டி வந்து கொட்டகையில் கட்டுவதற்காக அஜித், வயல்வெளி பகுதிக்கு சென்றான். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதில் மின்னல் தாக்கியதில் அஜித், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுபற்றி அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு வந்து அஜித் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுகுறித்த தகவல் அறிந்த அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com