திருவள்ளூர் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

திருவள்ளூர் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

திருவள்ளூர் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வேலு (வயது 22). பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேலு கட்டுமானப்பணிகள் முடிவடையாதநிலையில் உள்ள தனது வீட்டின் மாடியில் படுக்க சென்றார்.

மாடி படிக்கட்டில் இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com