புதிய அவதாரமெடுக்கும் நடிகர் கருணாஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கருணாஸ் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
புதிய அவதாரமெடுக்கும் நடிகர் கருணாஸ்
Published on

லொடுக்கு பாண்டி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் கருணாஸ். அதன்பின் வில்லன், காதல் அழிவதில்லை, திருடா திருடி, பிதாமகன் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். பிறகு கதாநாயகனாகவும் பாடகராகவும் தீவிரமாக அரசியல்வாதியாகவும் பயணித்து வந்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கி சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் 'வாடிவாசல்' படத்தில் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்றவுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் கருணாஸ், "கிராமிய கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது திரைத்துறைத்தான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு.

லொடுக்கு பாண்டி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் கருணாஸ். அதன்பின் வில்லன், காதல் அழிவதில்லை, திருடா திருடி, பிதாமகன் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். பிறகு கதாநாயகனாகவும் பாடகராகவும் தீவிரமாக அரசியல்வாதியாகவும் பயணித்து வந்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கி சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் 'வாடிவாசல்' படத்தில் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்றவுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் கருணாஸ், "கிராமிய கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது திரைத்துறைத்தான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com