நிகர அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து 3-வது மாதமாக வீழ்ச்சி

நிகர அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து 3-வது மாதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
நிகர அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து 3-வது மாதமாக வீழ்ச்சி
Published on

புதுடெல்லி,

கடந்த அக்டோபர் மாதத்தில் நிகர அன்னிய நேரடி முதலீடு, தொடர்ந்து 3-வது மாதமாக எதிர்மறையாக பதிவாகி உள்ளது. அதாவது, வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடு குறைவாகவும், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்யும் முதலீடு அதிகமாகவும் இருந்து வருகிறது.

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடு, இந்தியாவுக்கு வரும் முதலீடுகளை விட 150 கோடி டாலர் (ரூ.13,500 கோடி) அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலைதான், இந்தியாவில் இருந்து முதலீடு அதிகமாக வெளியேற காரணம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com