சரிவுடன் வர்த்தகமாகும் நிப்டி; இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
மும்பை,
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (09.12.2025 - செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் உள்பட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 65 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 895 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 112 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 344 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
69 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 618 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 245 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 858 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
6 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 757 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 87 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 537 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.






