கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Published on

ஆற்காடு

ஆற்காடு டவுன் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 37) என்பவர் கடந்த மாதம் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கஞ்சா வியாபாரி ரவியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

X

Dailythanthi
www.dailythanthi.com