சென்னை சென்று வந்த 7 வயது சிறுவனுக்கு கொரோனா?

சென்னை சென்று வந்த ஜலகண்டாபுரத்தை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து அவன் தனிமைப்படுத்தப்பட்டான்.
சென்னை சென்று வந்த 7 வயது சிறுவனுக்கு கொரோனா?
Published on

மேச்சேரி,

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன், 9 வயது சிறுவன் 2 பேரும் சென்னையில் உள்ள அவர்களது தாத்தா வீட்டில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அவர்களது தாத்தா இறந்து விட்டார். இதனால் துக்கம் விசாரிக்க இ-பாஸ் மூலம் அந்த சிறுவர்களின் தாய் மற்றும் உறவினர் ஒருவரும், ஆம்னி வேனில் சென்னை சென்றனர். வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஓட்டிச்சென்றார். பின்னர் சென்னையில் இருந்து 2 சிறுவர்கள் உள்பட 5 பேரும் ஜலகண்டாபுரம் திரும்பினார்கள். இது பற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் நங்கவள்ளி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மேலும் சளி மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொரோனா அறிகுறி

இந்த நிலையில் 7 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை அந்த சிறுவன் மற்றும் அவர்களது குடும்பத்தினர், வேன் டிரைவர் ஆகியோரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே ஜலகண்டாபுரத்தில் சிறுவன் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com