லாரி மோதி பிளம்பர் பலி

விருதுநகரில் லாரி மோதி பிளம்பர் இறந்தார்.
லாரி மோதி பிளம்பர் பலி
Published on

விருதுநகர்,

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). பிளம்பரான இவர் இரு சக்கர வாகனத்தில் சிவகாசி சென்று கொண்டிருந்தபோது அப்பநாயக்கன்பட்டி விலக்கு அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஆமத்தூர் போலீசார் லாரியை ஓட்டி வந்த ராஜபாளையம் கரிசல்குளம் பகுதியை சேர்ந்த மாடசாமி (32) என்பவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com