சிவசேனா வரலாற்றில் முதன் முறையாக தேர்தல் களம் காணும் தாக்கரே குடும்பம்

மராட்டியத்தில் சிவசேனா கட்சியை கடந்த 1966-ம் ஆண்டு பால்தாக்கரே ஆரம்பித்தார்.
சிவசேனா வரலாற்றில் முதன் முறையாக தேர்தல் களம் காணும் தாக்கரே குடும்பம்
Published on

மும்பை,

மராட்டியர்களின் நலனுக்காக மண்ணின் மைந்தர் கோட்பாட்டுடன் கட்சியை ஆரம்பித்து வழிநடத்திய அவர் தனது வாழ்நாளில் ஒரு போதும் தேர்தலில் போட்டியிட்டது இல்லை. அரசு பதவியும் வகித்தது இல்லை.

பால்தாக்கரேயின் மறைவுக்கு பின் சிவசேனாவின் தலைமை பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயும் தந்தை வழியில் கட்சி பொறுப்புகளை மட்டுமே வகித்து வருகிறார்.

இதுவரை அவரும் தேர்தல் களத்தில் இறங்கியது இல்லை. இந்த நிலையில், நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனாவின் மூன்றாம் தலைமுறை தலைவரான ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வந்தன.

சிவசேனாவின் முதல்-மந்திரி வேட்பாளராக ஆதித்ய தாக்கரே இருப்பார் என அக்கட்சி மூத்த தலைவர்களும் ஆரூடம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதை ஆதித்ய தாக்கரே முறைப்படி அறிவித்தார். மும்பையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே தான் ஒர்லி தொகுதியில் களம் இறங்குவதாக தெரிவித்தார்.

இதன் மூலம் சிவசேனா வரலாற்றில் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தலைவர் என்ற சிறப்பை ஆதித்ய தாக்கரே பெறுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பால்தாக்கரேயின் தம்பி மகனும், மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவருமான ராஜ்தாக்கரே போட்டியிட விரும்புவதாக அறிவித்து இருந்தார். ஆனால் பின்னர் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒர்லி சிவசேனாவின் செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால் அங்கு ஆதித்ய தாக்கரேயின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக சிவசேனா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com