பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுத்தாள் 1 மற்றும் தாள் 2–க்கான விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது
Published on

பெரம்பலூர்,

அந்த வகையில் வெங்கடேசபுரம் கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தனலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, வி.களத்தூர், அகரம், பெரம்பலூர் புனித மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒதியம் வான்புகழ் மேல்நிலைப்பள்ளி, சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விண்ணப்ப வினியோகம் நடந்தது. காலை 9 மணியிலிருந்தே தேர்வுக்கான விண்ணப்பத்தை பெற கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1க்கு 327 விண்ணப்பங்களும், தாள் 2க்கு 996 விண்ணப்பங்களும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெரம்பலூர் தனலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அளிக்க வேண்டும். முதல் நாளில் தாள் 1க்கு 17 விண்ணப்பங்களும், தாள் 2க்கு 38 விண்ணப்பங்களும் பூர்த்தி செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 23ந்தேதி வரை அளிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com