கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்
Published on

கல்லல்,

கல்லல் அருகே உள்ள வீழனேரி அழகிய மெய்ய அய்யனார் கோவில் பால்குட திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. வீழனேரி-சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் மொத்தம் 47 வண்டிகள் கலந்துகொண்டன. முதலில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் மொத்தம் 10 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை கரூர் பாரத் கம்பெனி வண்டியும், 2-வது பரிசை வீழனேரி சரவணன் வண்டியும், 3-வது பரிசை பனங்குடி ராசு வண்டியும் பெற்றது. அதன் பின்னர் மாட்டு வண்டி பந்தயம், பெரிய மாட்டு வண்டி, நடு மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவுகளாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் அறந்தாங்கி பி.இ.டி. வண்டி, தேனி மாவட்டம் தேவாரம் நவினஸ்ரீ வண்டி, மதகுபட்டி வெள்ளைக்கண்ணு வண்டி ஆகியவை முறையே முதல் 3 பரிசுகளை வென்றன.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை ஆட்டுக்குளம் அழகர்மலையான் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி வண்டியும், 3-வது பரிசை பரவை சோனைமுத்து வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை அலங்காநல்லூர் விஸ்வா ரவிச்சந்திரன் வண்டியும், 2-வது பரிசை குண்டேந்தல்பட்டி பவதாரணி வண்டியும், 3-வது பரிசை வீழனேரி சரவணன்செந்தில் வண்டியும் பெற்றது. முடிவில் வெற்றிபெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com