

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் 30-ந் தேதி இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06001) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு பிப்ரவரி 1-ந் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06002) மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதேபோல், தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் 31-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06003) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து பிப்ரவரி 1-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06004) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.