அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

கோப்புப்படம்
கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு வருகிற 26ம் தேதி பணி ஆணை வழங்கப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் வரும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 5-ம் தேதி நடந்த தேர்வில், எம்பிபிஎஸ் முடித்த 24 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு பணிநியமனம் செய்யப்படவுள்ள மருத்துவர்களுக்கு இன்று கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் இடம் பெற்றவர்கள் 15 நாட்களுக்குள் அந்தந்த மருத்துவமனைகளில் பணியில் சேர அறிவுறுத்தல் வழங்கப்படுகிறதுது. கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு வருகிற 26ம் தேதி பணி ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.






