சென்னை வடபழனி முருகன் கோவிலில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை,
சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் புதியதாகத் தொடங்கப்பட உள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணியிடங்களை நேர்முகத்தேர்வு வாயிலாக நிரப்புவதற்குத் தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1) தேவார ஆசிரியர் பணியிடம்-1க்கு (சம்பளம் மாதம் ரூ.25,000/-) கல்வித் தகுதியாக சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு "பன்னிரு திருமுறை" பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
2) இசை ஆசிரியர் பணியிடம்-1க்கு (சம்பளம் மாதம் ரூ.25,000/-) கல்வித் தகுதியாக குரலிசையில் மூன்று வருட பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
3) தமிழ் ஆசிரியர் பணியிடம்-1க்கு (சம்பளம் மாதம் ரூ.25,000/-) கல்வித்தகுதியாக தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவம் தகுதிகள் மற்றும் இதர விவரங்கள் www.hrce.tn.gov.in மற்றும் www.vadapalaniandavar.hrce.tn.gov.in கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ 30.09.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட தேதிக்குப்பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி
துணை ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்,
வடபழனி, சென்னை 600 026
தக்கார்
துணை ஆணையர் /செயல் அலுவலர்






