மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.) நிறுவனத்தில் காலியாக 160 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.) நிறுவனத்தில் காலியாக 160 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்கள் பின்வருமாறு:
பணி நிறுவனம்: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.)
காலி பணிகள்: 160 (ஒப்பந்த அடிப்படை)
பதவி: டெக்னிக்கல் ஆபீசர் - சி
பணி இடம்: ஐதராபாத்
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பி.இ., பி.டெக். படிப்புகள். ஒரு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது: 31-8-2025 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட், நேர்காணல், ஆவண சரிபார்ப்பு
தேர்வுமையம் (தமிழ்நாடு): சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2025
இணையதள முகவரி: https://www.ecil.co.in/jobs.html






