உச்ச நீதிமன்றத்தில் வேலை: 30 பணியிடங்கள்..யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
புதுடெல்லி,
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் வருமாறு
பணியிடங்கள்; கோர்ட் மாஸ்டர் (சுருக்கெழுத்து) பிரிவில் 30 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. கூடுதல் தகுதியாக ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 120 வார்த்தை சுருக்கெழுத்து திறன் தேவை. கம்ப்யூட்டரில் நிமிடத்துக்கு 40 வார்த்தை டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவம்: தனிச்செயலர் / தனி உதவியாளர் / சீனியர் ஸ்டெனோகிராபராக குறைந்தது ஐந்தாண்டு பணி.
வயது : 15.9.2025ன் படி - 45 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 750
கடைசிநாள்: 15.9.2025
கூடுதல் விவரங்கள் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பினை படிக்க: sci.gov.in






