தெலுங்கானாவில் 10 நாள் ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது

கொரோனா பரவல் அதிகரிப்பால் தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் 10 நாள் ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது
Published on

ஐதராபாத்,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்தில் இன்று (மே 12-ந் தேதி) காலை 10 மணி முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஊரடங்கு நாட்களில் தினமும் காலையில் 6 மணி முதல் 10 மணி வரை மக்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படும். மற்றபடி, ஊரடங்கு நேரத்தில் எந்தெந்த சேவைகளுக்கு விதிவிலக்கு என்பது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளவில் ஒப்பந்தப்புள்ளி கோரவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com