வெளிநாட்டினர் 10 பேர் தப்பி ஓட்டம்

வெளிநாட்டினர் 10 பேர் தப்பி ஓடியுள்ளனர்.
வெளிநாட்டினர் 10 பேர் தப்பி ஓட்டம்
Published on

பெங்களூரு: பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகுப்பி பகுதியில் உள்ள காவல் தடுப்பு மையத்தில் வங்காளதேசம், உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அந்த தடுப்பு மையத்தில் இருந்து வங்காளதேசத்தை சேர்ந்த 7 ஆண்கள், உகாண்டாவை சேர்ந்த 3 பெண்கள் தப்பி சென்று உள்ளனர்.

ஆண்கள் 7 பேரும் சுவர் ஏறி குதித்தும், பெண்கள் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறையின் ஜன்னல் கம்பியை முறித்தும் தப்பி சென்றது தெரியவந்து உள்ளது. இவர்கள் 10 பேரும் கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதியே தப்பி சென்று உள்ளனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றது தற்போது தான் வெளிவந்து உள்ளது. இதுபற்றி கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடியவர்களை தேடிவருகிறார்கள். மேலும் இதுபற்றி வங்காளதேசம், உகாண்டா நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com