காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் 2 காவலர்கள் உள்பட 10 பேர் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 2 காவலர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் 2 காவலர்கள் உள்பட 10 பேர் காயம்
Published on

காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் காவலர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் அந்த குண்டு தெருவில் விழுந்து வெடித்துள்ளது.

இதில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் காவலர்கள். கடந்த 4 நாட்களில் காஷ்மீரில் நடந்த 10வது தாக்குதல் இதுவாகும்.

இதனை தொடர்ந்த அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com