கேரளத்தில் மேலும் 10 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பு

கேரளத்தில் நடப்பு ஜூன் மாதம் மட்டும் 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் மேலும் 10 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலத்தில் நேற்று கோழிக்கோட்டில் 4, மலப்புரத்தில் 5, வயநாட் டில் 1 என 10 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள் ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை மாநிலம் முழுவதும் 266 பேர் ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு ஜூன் மாதம் மட்டும் 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதேபோல் நிபா வைரஸ் பாதிப்பு கேரளாவில் குறைந்துள்ளது.

கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் நிபா வைரஸ் பாதித்த நோயாளி ஒரு வர் தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வரு கிறார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com