ஒடிசா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு

ஒடிசாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read
தமிழகத்தில் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி - அமைச்சர் பெரியசாமி

ஒடிசா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு

முன்னதாக இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் சிகிச்சை பெற்று வந்த 23 நோயாளிகள் உடனடியாக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 10 பேர் காயங்களால் உயிரிழந்தனர்.

Also Read
தேனி மாவட்டத்தில் 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி - தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்

ஒடிசா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு

மேலும் நோயாளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விபத்தில் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட ஒடிசா மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, சுகாதார மந்திரி முகேஷ் மஹாலிங்குடன் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Also Read
ஒடிசாவில் இன்று மாநிலங்களவை தேர்தல்: ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்கவைப்பு

ஒடிசா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு

தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்ட மோகன் சரண் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மோகன் சரண் மாஜி, விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com