ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டெரி அங்கான் காட்டுப்பகுதியில் ஒரு சில நிமிடங்களிலேயே பேய் மழை கொட்டித்தீர்த்தது. இதில் 100 ஆடுகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் மனித உயிரிழப்பு ஏற்படவில்லை.