கேரளாவில் ஒரு வாரத்தில் 100% கொரோனா அதிகரிப்பு; சுகாதார மந்திரி பேட்டி

கேரளாவில் ஒரு வாரத்தில் 100% கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன என சுகாதார மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.
கேரளாவில் ஒரு வாரத்தில் 100% கொரோனா அதிகரிப்பு; சுகாதார மந்திரி பேட்டி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.18% ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், நேற்று வரை 345 ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 155 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்டா வகையால் எண்ணிக்கை உயருகிறது என தெரியவந்துள்ளது. கேரளாவில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் இரண்டு வகையும் உள்ளன. ஒரு வாரத்தில் 100% கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com