ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 100 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டிருப்பதாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறியுள்ளார்.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

ஸ்ரீநகர்,

ராணுவம் மற்றும் போலீசார் இணைந்த பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் 100 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டிருப்பதாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறியுள்ளார்.

"இந்த ஆண்டின், முதல் 5 மாதம் 12 நாட்களில் 100 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 71 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள், 29 பேர் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டில் இதே காலத்தில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர்" என்று அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com