இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..!!

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய பாதிப்பை விட 9,550 குறைவாகும்). இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,89,03,731 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,88,884 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,42,676 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,63,01,482 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 21,13,365 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,61,16,60,078 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67,49,746 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,60,954 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 71,34,99,892 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய பாதிப்பை விட 3.69 சதவீதம் இன்று அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com