

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரையில் மத்திய அரசு, தடுப்பூசி திட்டத்துக்காக 116.5 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகம் செய்துள்ளது.
இவற்றில் பயன்படுத்தியதுபோக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 15 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரத்து 451 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.