கர்நாடகாவில் இன்று புதிதாக 1,279 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 20 பேர் பலி

கர்நாடகாவில் இன்று புதிதாக 1,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று புதிதாக 1,279 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 20 பேர் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று 1,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,96,563 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,900 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 8,61,588 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 23,056 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com