வாகனம் சென்று கொண்டிருந்தபோது சரிந்து விழுந்த பாறை: 13 பேர் உயிரிழந்த சோகம்

இமாச்சலப் பிரதேசத்தின் கடூ நாலா பகுதியில் வாகனம் மீது பாறை விழுந்து 6 மாத குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
வாகனம் சென்று கொண்டிருந்தபோது சரிந்து விழுந்த பாறை: 13 பேர் உயிரிழந்த சோகம்
Published on

சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தின் லாஹால் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள உதய்பூர்-பாங்கி சாலையில், சென்றுகொண்டிருந்த வாடகை வாகனத்தின் (டாக்ஸி) மீது அருகிலுள்ள மலையிலிருந்து ராட்சதப் பாறைகள் திடீரென விழுந்ததில், ஆறு மாதக் குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெரிய பாறைகள்

இமாச்சலப் பிரதேசத்தின் குல்லுவிலிருந்து கில்லருக்கு சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தின் மீது, 'கடூ நால்லா' (Kadu nallah) பகுதிக்கு அருகே பெரிய பாறைகள் திடீரென விழுந்து வாகனத்தை முழுமையாக நசுக்கின. இந்த விபத்துக்கு பிறகு, வாகனத்தின் பின்பகுதி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

மீட்புப் பணிகள்

விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

துயர சம்பவம்

உயிரிழந்தவர்களில் 6 மாத குழந்தையை தவிர ஏழு ஆண்களும், நான்கு பெண்களும் அடங்குவர். உயிரிழந்தவர்களில் ஒருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் சம்பா மாவட்டத்தின் பாங்கி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் வேளையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com