15 வயது சிறுமிக்கு 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை; 2 சிறுவர்கள் உள்பட 33 பேர் கைது

மராட்டியத்தில் 15 வயது சிறுமியை 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உள்பட 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
15 வயது சிறுமிக்கு 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை; 2 சிறுவர்கள் உள்பட 33 பேர் கைது
Published on

புனே,

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் தோம்பிவிலி பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை இந்த ஆண்டு ஜனவரியில் அவரது நண்பர்கள் சிலர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை படம் பிடித்து வைத்து கொண்டு சிறுமியை மிரட்டியுள்ளனர். அதனை பயன்படுத்தி தொடர்ந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வீடியோவை பின்னர் மற்ற நண்பர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் அனுப்பியுள்ளனர். அவர்களும் சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுபற்றி சிறுமி தன்னுடைய அத்தையிடம் தெரிவித்துள்ளார். இதன்பின்னரே அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் கடந்த 23ந்தேதி பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து 33 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com