கர்நாடகாவில் மேலும் 1,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை தகவல்

கர்நாடகாவில் மேலும் 1,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மேலும் 1,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை தகவல்
Published on

பெங்களூரு,

சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தநிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 1,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,016 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 19 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9,406 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com