படேல் சிலைக்கு அருகே உள்ள ஏரியில் இருந்து 194 முதலைகள் இடமாற்றம்; குஜராத் அரசு நடவடிக்கை

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கேவடியாவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் இந்த சிலை அமைந்துள்ள பகுதி மிகப்பெரிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது.
படேல் சிலைக்கு அருகே உள்ள ஏரியில் இருந்து 194 முதலைகள் இடமாற்றம்; குஜராத் அரசு நடவடிக்கை
Published on

இந்த சிலையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள், சிலைக்கு அருகே உள்ள பஞ்ச்முலி ஏரியில் படகு சவாரியும் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. இது சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே கடந்த 2 ஆண்டுகளாக முதலைகளை இடமாற்றம் செய்யும் பணிகளை மாநில வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏரியில் 60-க்கு மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த கூண்டுகள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 194 முதலைகள் பிடிக்கப்பட்டு உள்ளன. இதில் கடந்த 2019-20-ம் ஆண்டில் மட்டுமே 143 முதலைகள் பிடிக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் சர்தார் சரோவர் அணையிலும், பாதுகாப்பு மையங்களிலும் விடப்பட்டு உள்ளன. ஏரியில் இன்னும் ஏராளமான முதலைகள் இருப்பதாகவும், அவற்றை இடமாற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் வன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com