மங்களூருவில் காரில் போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது

மங்களூருவில் காரில் கடத்திய ரூ.4½ லட்சம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூருவில் காரில் போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது
Published on

மங்களூரு-

மங்களூருவில் காரில் கடத்திய ரூ.4 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் வாகன சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே காவூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவூர் போலீசார் நேற்று முன்தினம் மூட்செட் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது.

அந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது காரில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது காரில் எம்.டி.எம்.ஏ. என்னும் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மூட்செட் பகுதியை சேர்ந்த முகமது ஷாரூக் (வயது 27), பைக்கம்பாடி அருகே ஜோக்கட்டே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (45) என்பதும், அவர்கள் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

தற்போது எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை கடத்தி வந்தபோது சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் மற்றும் ஒரு கார், 3 அரிவாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com