

புதுடெல்லி,
டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் 4 அடுக்கு கட்டிடம் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், அந்த வழியே சென்ற 2 சிறுவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்துள்ளன. இதில் அவர்கள் படுகாயமடைந்து உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து, உள்ளூர் போலீசார், டெல்லி மாநகராட்சி அதிகாரிகள், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மத்திய சரகம் (டெல்லி) இணை ஆணையாளர் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு உள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் நடந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.