நாக்பூரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

நாக்பூரில் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
நாக்பூரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த ஷாலிமார் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில், நாக்பூர் அருகே கலம்னா வழித்தடத்தில் சென்றபோது, ரெயிலின் பார்சல் பெட்டி மற்றும் ஒரு பயணிகள் பெட்டி ஆகிய 2 பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்து ரெயில்வே அதிகாரிகள் சுமார் 5 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் கலம்னா-இத்வாரி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com