காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் பாபச்சன்-பந்திப்போரா பாலத்தில் சோதனை மையம் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த, லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேரை பிடித்து கைது செய்தனர். அபித் வாஸா, பஷீர் அகமது கோஜர் என்ற அவர்கள் இருவரும், வடக்கு காஷ்மீரின் பந்திப்போராவை சேர்ந்தவர்கள்.

அந்த பகுதியில் செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளுக்கு உறைவிடம் அளிப்பது, பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற உதவிகளை அவர்கள் செய்துவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பந்திப்போராவில் பாதுகாப்பு படையினர் மீது கையெறிகுண்டு தாக்குதல் நடத்தவும் அவர்களுக்கு பயங்கரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து, இரண்டு கையெறிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com