குல்காம் என்கவுண்டரில் 2 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் குல்காம் என்கவுண்டரில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #KulgamEncounter
குல்காம் என்கவுண்டரில் 2 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜூன் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்பு படைகள் மேற்கொண்டு வருகிறது. இன்று தேசிய நெடுஞ்சாலையில் ராணுவம், மத்திய துணை ராணுவப்படைகள் மற்றும் போலீஸ் மேற்கொண்ட ஆப்ரேஷனில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்கவுண்டர் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com