14 வயது சிறுமியை கற்பழித்த 2 பேரை துரத்தி சென்று கடித்து காப்பாற்றிய வளர்ப்பு நாய்

14 வயது சிறுமியை கற்பழித்த 2 பேரை சிறுமியின் வளர்ப்பு நாய் துரத்தி சென்று கடித்து காப்பாற்றியுள்ளது.
14 வயது சிறுமியை கற்பழித்த 2 பேரை துரத்தி சென்று கடித்து காப்பாற்றிய வளர்ப்பு நாய்
Published on

சாகர்,

மத்திய பிரதேசத்தின் சாகர் அருகே கரீலா கிராமத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமி கொசுக்களை விரட்ட புகை மூட்டம் போடுவதற்காக வைக்கோல் கொண்டு வர நள்ளிரவில் வெளியே சென்றுள்ளாள்.

அந்த சிறுமியை பின் தொடர்ந்த ஐஷு அஹிர்வார் (வயது 39), புனித் அஹிர்வார் (வயது 24) கத்தி முனையில் சிறுமியை தடுத்து நிறுத்தி மிரட்டி உள்ளனர். பின்னர் சிறுமியை கடத்தி ஆளில்லாத குடிசை ஒன்றிற்குள் கொண்டு சென்று கற்பழித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளாள். இதனை கேட்ட சிறுமியின் வளர்ப்பு நாய் அங்கு ஓடியுள்ளது. ஐஷுவை அது கடித்து உள்ளது. ஐஷு நாயை கத்தியால் தாக்கி உள்ளான். ஆனால் தொடர்ச்சியாக நாய் குரைத்து உள்ளது.

இந்நிலையில், அவர்களின் பிடியில் இருந்து சிறுமி தப்பி வீட்டை நோக்கி ஓடியுள்ளாள். சிறுமியின் சத்தம் மற்றும் தொடர்ச்சியாக நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அருகில் வீட்டில் இருந்தவர்கள் குடிசையை நோக்கி ஓடியுள்ளனர். இதனால் அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுபற்றி சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com