காஷ்மீர் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சாவு, ராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சாவு, ராணுவ வீரர் வீரமரணம்
Published on

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரின் காசிகாண்ட் பகுதியில் பாதுகாப்பு படையின் வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். ஸ்ரீநகரை நோக்கி சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் தொடங்கியது. அப்பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து இருதரப்பு இடையேயும் மோதல் வெடித்தது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் ஆப்ரேஷன் தொடர்கிறது என கடைசியாக கிடைக்க பெற்ற தகவல்கள் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com